Showing posts with label மலைப்பாம்பை இரையாக்கும் புலி. Show all posts
Showing posts with label மலைப்பாம்பை இரையாக்கும் புலி. Show all posts

Friday, April 9, 2010

மலைப்பாம்பை இரையாக்கும் புலி

முதுமலை புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. அங்குள்ள புலிகள் பசுமையான இடங்களை தேடி அங்கும் இங்கும் அலைகின்றன. கடும் பசியினால் அலைந்த புலி ஒன்று இரையாக வேறு விலங்கினங்கள் கிடைக்காத நிலையில், ஒன்றை கடித்து சாப்பிடும் அரிய காட்சியை படத்தில் காணலாம்.
********
நம் கருத்து:

மனிதர்களின் வாழ்வாதாரத்தையும் மாற்றி, விலங்குகளின் வாழ்வாதாரத்தையும் மாற்றி விளையாண்டு கொண்டிருக்கிறான் மனிதன். வரப்போகும் ஆபத்துகள் அறியாமல். முன்னேற்றம் எனும் பெயரில் காடுகளை அழித்ததில் மனிதனின் வாழ்வு ஒழிந்தது. மழையும் பொய்த்தது. பறவைகள் இருப்பிடம் இழந்தது. இன்று விலங்குகளும் உணவுமுறையை மாற்றிக்கொண்டுள்ளது. இனி மனிதனும் மாறுவான்.

ஆங்கில திரைப்படங்களில் மட்டுமே கண்ட பல விநோத நிகழ்ச்சிகளும் மனிதனை மனிதன் திண்கிறான் எனும் பெயரில் நடைபெறாலாம். மரம் வளர்ப்போம் மழை வளர்ப்போம்.


நீங்களும் இக்கருத்தை ஆமோதித்தால் ஒப்புதலை தெரிவியுங்கள் வாக்குகளாக

Bookmark and Share